நெடுந்தீவு மேற்கு நெழுவினி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் – 2025 இல் இன்றையதினம் (ஏப்ரல்14 ) திங்கட்கிழமை தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது.
அதிகாலையே பூர்வாங்க கிரியைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் புது வருடப் பிறப்பான இன்றையதினம் காலை 9.00 மணிக்கு விநாயகப்பெருமான் தேரேறி வலம் வந்து அருள்பாலிக்கவுள்ளார்.
இதேவேளை நெழுவினி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகோற்சவ பெருவிழாவில் இன்று மாலை 5.00 மணிக்கு தீர்த்தத்திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.