வட்டுக்கோட்டை பகுதியிலிருந்து நேற்று (ஓகஸ்ட் 3) மாடுகளை திருடிச்சென்ற ஒருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகனமொன்றில் மாடுகளை கடத்திச் செல்வதாக, மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் நவாலி மயானத்துக்கு அருகில் வைத்து யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன் மாடுகளையும் கைப்பற்றினர்.
பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.