யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணைகோட்டையம்பதி ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திலே இந்த ஏலம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆலயத்தில் வருடாந்த திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம்நாளான நேற்று (ஜூன்03) மாம்பழத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக முருகனின் மாம்பழம் ஆலயநிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது. இதன் போது உள்நாட்டிலும்வெளிநாடுகளிலும் இருந்தும் ஆலயத்திற்கு வந்திருந்த அடியவர்கள்குறித்தமாம்பழத்தை வாங்கும் நோக்கில் ஏலத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது வெளிநாட்டில் அதாவது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்தஅடியவர் ஒருவர் 4 இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாவிற்கு இந்த மாம்பழத்தைஏலத்தில் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.