மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் கீழே விழுந்து மயங்கிய நிலையில்நேற்றையதினம் (ஜூன் 27) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ் ஈச்சமோட்டை பகுதியைச் சேர்ந்த ஜீவராசா மேரிதெரேசா (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 19 ஆம் திகதிஊர்காவற்றுறையில் உள்ள தனது வீட்டினை பார்ப்பதற்கு மகனுடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்குமுன்பாக இடது பக்கமாக ஒருவர் துவிச்சக்கர வண்டியில் வந்துள்ளார் , இந்நிலையில் திடீரென பிரேக்கினை அழுத்திய வேளை பின்னாலிருந்தவர் திடீரென கீழே விழுந்து மயங்கியுள்ளார்.
உடனடியாக ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் பின்பு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.