நெடுந்தீவு புனித யூதாததேயு ஆலய திருவிழா இன்று (ஏப்ரல்05) காலை பெருமளவான பக்தர்களின் பக்கேற்புடன் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
காலை திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழா திருப்பலியும் திருச்சுருப பவனி, ஆசீர்வாதம் என்பன இடம்பெற்றதுடன் அப்பகுதியில் இருந்து கடற்தொழில் செய்வோருக்கான தொழில் ஆசிர்வாதமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல்03 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நேற்றையதினம் (ஏப்ரல்04) மாலை நற்கருணைத் திருவிழா திருப்பலி இடம்பெற்றது.