நெடுந்தீவு பிரதேச பண்பாட்டு விழா – 2025 பிரதேச கலைஞர் கௌரவிப்புநடைபெறவுள்ளதால் கலைஞர்களது தெரிவு இடம்பெறவுள்ளது.
குறித்த கௌரவிப்பு பெறுவதற்குரியவர்களை தெரிவு செய்வதற்காகநடாத்தப்படும் நேர்முகத் தேர்வு எதிர்வரும் ஜூலை 02 புதன்கிழமை காலை9.30 மணிக்கு நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் கலைஞர்கள் பின்வரும் ஆவணங்களுடன் குறித்த தினத்தில் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கலைஞர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்.
1.ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்.
2.கலை இலக்கிய செயற்பாடுகளின் முழுமையான விபரங்கள். (தாங்கள்கலைப்பணியில் ஈடுபடத் தொடங்கிய காலம் தொடக்கம் இன்றுவரை ஆற்றியகலைச் சேவைகள் பற்றிய விபரங்கள் தொகுத்து கையெழுத்து பிரதியாகசமர்ப்பிக்கவும் )
3.இதுவரை பெற்ற விருதுகள் பாராட்டுப் பத்திரங்கள் கௌரவிப்புகள் பற்றியஆவணங்கள்.