நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான 2025 ஆம் ஆண்டுக்கான குழுப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் அண்மையில் நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற ஆண்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஸ்ரார்விளையாட்டுக் கழக ஆண்கள் அணி முதலிடத்தினைப் பெற்று சம்பியனாகியுள்ளதுடன் சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளது.