செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் நேற்று (ஓகஸ்ட் 05) புதுதாக 6 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்காணப்பட்டுள்ளன. இதன்மூலம், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனிதஎச்சங்களின் மொத்த எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.
“தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01″ மற்றும் “தடயவியல்அகழ்வாய்வுத்தளம் இல – 02″ என நீதிமன்றத்தினால் அடையாளப்படுத்தப்பட்டஇரண்டு மனிதப் புதைகுழிகளிலும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இரண்டாம் கட்டப் பணிகளுக்காக நீதிமன்றத்தினால் அனுமதிக்கப்பட்ட 45 நாட்களில், இன்று 31 ஆவது நாளாகப் பணிகள் நடைபெற்றன.
இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், இன்றுவரை 65 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாகஅகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இன்று அகழ்ந்தெடுக்கப்பட்ட 4 எலும்புக்கூடுகளுடன் சேர்த்து, இதுவரைமொத்தமாக 130 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்துஎடுக்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள இரண்டு மனிதப் புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில்வேறு புதைகுழிகள் உள்ளனவா என்பதனைக் கண்டறியும் நோக்கில், தரையைஊடுருவும் ராடர் (G.P.R. Scanner) மூலம் ஆய்வு நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு முடிவுகள், மேலதிகஅகழ்வுப் பணிகளுக்கு வழிகாட்ட உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.