காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்துகப்பல் சேவையானது இன்று (பெப். 12) புதன்கிழமை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தைஆரம்பித்த கப்பலானது, காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்துநாகபட்டினத்தை சென்றடையும்.
இந்த கப்பல் சேவையானது செவ்வாய்க்கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள்இயக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.