இடைநீக்கம் செய்யப்பட்ட அல்லது சேவையை விட்டு வெளியேறிய நிலையில்மீண்டும் பணியில் சேரும் அதிகாரிகளின், போதைப்பொருள் பயன்பாட்டைக்கண்டறிய வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.என பொலிஸ் ஊடகப் பிரிவு ஒரு விசேட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அதில், பொலிஸ் அதிகாரிகள், மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கு முன்பு, போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைக் கண்டறிய, பொலிஸ்வைத்தியசாலையில் பொருத்தமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்என நாட்டில் உள்ள அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர்அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரி ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வைத்திய அறிக்கைஊடாக தெரியவந்தால், அந்த அதிகாரியை மீண்டும் பணியில் அமர்த்தவோஅல்லது செயலில் உள்ள பணியில் மீண்டும் சேரவோ அனுமதிக்கப்பட மாட்டாதுஎன பதில் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.