2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வு தற்போது நடைபெற்று வருகின்றது.
18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்கள்) வாக்காளர் இடாப்பில் தங்களைப் பதிவு செய்துகொள்ள முடியும்.
2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் பிறந்தவர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ள முடியும்.
புதிதாக வதிவுக்கு வந்தவர்களும் தங்களின் விவரங்களைப் பரிவு செய்ய முடியும். அதேநேரம் வாங்காளர் பதிவு நீக்கவும் முடியும்.
வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பிரஜைகள் தேர்தல்கள் திணைக்கள இணையத்தளத்தின் ஊடாகப் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.