யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த பஸ்ஸின் சாரதி மீதுஅடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வாள்வெட்டுத் தாக்குதல்மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (பெப். 07) இரவு இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியேவாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்த பஸ் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், பஸ்ஸில் பயணித்த பயணிகள் நடு வீதியில்நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.