இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் நடத்தப்பட்ட கூட்டுநடவடிக்கையில், பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றஇரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் நேற்று (மே 27) கைப்பற்றப்பட்டன.
குறித்த படகுகளில் இருந்து ஹெராயின் மற்றும் ஐஸ் உள்ளிட்டபோதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை சுமார் 450 கிலோ என்பதுடன் இச் சம்பவம் தொடர்பாக 11 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியைச்சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.