கடந்த காலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கணிசமானளவு மக்களின் பிரச்சினைகளையும் எதிர்பார்ப்புக்களையும் தீர்த்து வைத்த போதிலும், அவை அரசியல் மயப்படுத்தாமையே அண்மைய தேர்தல் பின்னடைவிற்கு காரணம்என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும்முக்கியஸ்தர்களுடன் இன்று (பெப். 15) யாழ் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக பொதுத் தளத்தில்ஆராயப்பட்டு வருவதாக ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாஇதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் யதார்த்த அரசியலையும், ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாடுகளில்இருக்கின்ற நியாயத்தினையும் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில், தெளிவுபடுத்த வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தியதுடன் , தற்போது மக்கள்எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை அடையாளப்படுத்தி, அவற்றைதீர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய்தல் மற்றும் கவனயீர்ப்பு செயற்பாடுகள்முன்னெடுக்க வேண்டிய அவசியம் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.