நெடுந்தீவு புனித பற்றிமா அன்னை ஆலயத்தை சேர்ந்த எட்டு சிறார்கள் இன்றையதினம் (மே10) முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.
புனித பற்றிமா அன்னை ஆலயத்தின் வருடாந்த நவநாள் திருப்பலி இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றுகாலை முதல்நன்மை அருட்சாதனத்தை பெறும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
ஆலய நிர்வாகத்தினர் இச்சிறார்களுக்கு வாழ்த்துக்களையும் , செபங்களையும்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.