நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள், வடக்குமாகாணஉள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், இன்று (ஜூன் 30) நெடுந்தீவு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது தவிசாளர் தெரிவிற்காக தமிழரசுக்கட்சி சார்பில் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் அவர்களின் பெயர் பிரேரிக்கப்பட்டதுடன் வேறு நபர்களின்பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டார்.
புதிய தவிசாளர் தெரிவு செய்யப்பட்டதையடுத்து உப தவிசாளருக்கான தெரிவுஇடம்பெற்றது. உப தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சந்தியாப்பிள்ளை செபஸ்ரியான்விமலதாஸ் பிரேரிக்கப்பட்டதுடன் வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாதநிலையில் அவர் போட்டியின்றி உபதவிசாளராக தெரிவுசெய்யப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.