நாளை திங்கட்கிழமை (ஜனவரி 16) வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்த போதும், அவற்றில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாளை வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை என்றும், பொது விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. பாடசாலைகள் உட்பட ஏனைய அரச செயற்பாடுகள் நாளை வழமைபோன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.