நெடுந்தீவு மகா வித்தியாலயம் சார்பில் தேசிய படகு வலித்தல் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு தீவக கல்வி வலய உடற்கல்விஉதவிக்கல்விப்பணிப்பாளரால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய மட்டத்தில் கடந்த மே3 கொழும்பில் நடைபெற்ற Dragon Board படகு வலித்தல் போட்டியில் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், பெண்கள் பிரிவில் தம்பாட்டி அ. மூன்றாம் இடத்தையும்பெற்றுக்கொண்ட மகா வித்தியாலய அணியினருக்கே வித்தியாலய மாநாட்டு மண்டபத்தில் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது பதக்கம் அணிவித்து வெற்றிக் கிண்ணமும் வழங்கி கெளரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.