கிளி- பளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள குறிஞ்சா தீவில் உப்பள உற்பத்தியைமுன்னெடுப்பது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில்வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றையதினம் (மார்ச்14) கலந்துரையாடப்பட்டது.
குறிஞ்சா தீவில் இலங்கை உப்புக் கூட்டுத்தாபனமே உப்பளத்தைநடத்தவுள்ளதாக, உப்புக் கூட்டுத்தாபனத்தின் பொதுமுகாமையாளர் தெரிவித்தநிலையில்,
அந்தக் காணியை அளவீடு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்திஅதனை உப்புக் கூட்டுத்தாபனத்திடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளைமுன்னெடுக்குமாறு வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.