ஜனாதிபதியின் உயரிய எண்ணக்கருவில் அமைந்த ‘Clean SriLanka’ வேலைத்திட்டத்திற்கமைய கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும்வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழானகெளதாரிமுனை கடற்கரைப் பிரதேசத்தினை சுத்தம் செய்யும் பணி இன்று(ஜூலை 29) காலை முன்னெடுக்கப்பட்டது.
55 ஆவது இராணுவ படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் அருனா விஜகோன் மற்றும்கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் ஆகியோரின்பங்கேற்புடன் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கெளதாரிமுனை கடற்கரை பிரதேசத்தின் 7 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இச்சிரமதான பணியில் பூநகரி பிரதேச செயலாளர் ஆயகுலன்,எனையதிணைக்களங்களின் அரச அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர்பொலிஸ் உத்தியோகத்தர்கள்,பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கெடுத்திருந்தனர்.