உள்ளூராட்சித் தேர்தல் 2025 இல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்மற்றும் சுயேட்சை குழுக்களைச் சேர்ந்தவர்கள் என சுமார் 80,000 வேட்பாளர்கள்போட்டியிடுகின்றனர்.
இந்தக் குழுவில் 107 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 49 சுயேட்சைகுழுக்களும் போட்டியிடவுள்ளதுடன் இந்த தேர்தலில், 8,500 உறுப்பினர்கள்தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் நேற்று (மார்ச்20) மதியம் 12.00 மணியுடன் முடிவடைந்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால்தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்புமனுக்களும்நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், தேர்தல் வேட்பாளர்களின் பெயர்கள் அடுத்த வாரத்திற்குள்வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது.