ஆனையிறவு ஒன்றும் உப்புச்சப்பற்ற இடப்பெயர் அல்ல. அது தமிழ் மக்களின்வரலாற்றில், வாழ்வியலில், பொருளியலில், போரியலில் பின்னிப்பிணைந்துஅவர்தம் ஆன்மாவுடன் இரண்டறக் கலந்துவிட்ட பெயர் என பொ.ஐங்கரநேசன் நேற்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது அறிக்கையி்ல்..
இலங்கையில் உப்பளங்களை நிர்வகித்து வருகின்ற தேசிய உப்புவரையறுக்கப்பட்ட நிறுவனம் ஆனையிறவில் விளையும் உப்புக்கு றஜலுனு எனப்பெயரிட்டுள்ளது.
இதுகாலவரையில் ஆனையிறவு உப்பு என விழிக்கப்பட்டு வந்த உப்பு றஜலுனுஎனப் பெயரிடப்படும் அளவுக்கு, ஆனையிறவு ஒன்றும் உப்புச்சப்பற்ற இடப்பெயர்அல்ல. அது தமிழ் மக்களின் வரலாற்றில், வாழ்வியலில், பொருளியலில், போரியலில் பின்னிப்பிணைந்து அவர்தம் ஆன்மாவுடன் இரண்டறக் கலந்துவிட்டபெயர்.
யானைகள் தாவர உண்ணிகள் என்பதால் அவற்றின் உடலில் உப்புச்சத்துப்பற்றாக்குறைவு ஏற்படும்போது அவை உப்பைத்தேடிச்சென்று உண்பது வழமை. ஆனையிறவு என்ற பெயர் நிலவுவதற்கு, வன்னிக் காட்டுயானைகள் உப்பைத்தேடிவந்த கடவை இது என்பதோடு, ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில்வன்னியானைகள் ஏற்றுமதியின் பொருட்டு யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள்கொண்டுவரப்பட்ட பாதையாக இது அமைந்தமையுமே காரணமாகும்.
ஆனையிறவுக் கடல் நீரேரிகளின் கரைகளில் உப்பு விளைவதை அவதானித்தஆங்கிலேயர்கள் 1938இல் ஆனையிறவு உப்பளத்தை அமைத்தனர். இங்குவிளையும் உப்பை மூலப்பொருளாகக் கொண்டு 1954இல் பரந்தன் இரசாயனத்தொழிற்சாலை உருவானது. உப்பளமும், இரசாயனத் தொழிற்சாலையும் யுத்தம்உச்சம்பெறும் வரைக்கும் ஆயிரக்கணக்கானவர்களின் பொருளாதாரத்தைமேம்படுத்தும் வேலைவாய்ப்புகளை வழங்கியிருந்தன.
ஆனையிறவின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக 1760இல்போர்த்துக்கேயர்கள் தங்களது இராணுவத் தளமாக இங்கு கோட்டையொன்றைஉருவாக்கினர். பின்னர் ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்று இலங்கையை ஆண்டஅந்நியர்களிடம் கைமாறிய இக்கோட்டை சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின்வசமாகியது. 1952இல் இக் கோட்டை நவீனவசதிகளுடன் கூடிய இராணுவத்தளமாக வடிவமைக்கப்பட்டது.
ஆனையிறவுப் பாதையால் பயணிப்பது என்பது மரணத்தின் குகையினூடாகச்செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ் மக்கள் நடுங்கும் அளவுக்கு பின்னாளில்இங்கு அமைந்திருந்த சோதனைச் சாவடிகள் திகிலூட்டுவனவாகஅமைந்திருந்தன. சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படுபவர்கள் இங்கு கொடும்சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதும், பின்னர் இக்கோட்டைவிடுதலைப்புலிகள் வசமாகி நிர்மூலமாக்கப்பட்டதும் வரலாறு.
ஆனையிறவு இவ்வளவு முக்கியத்துவங்களோடு இடவமைவு காரணமாக இங்குவிளையும் உப்புக்கு முதல்தரமான உப்பு என்ற பெருமையையும்தேடிக்கொடுத்தது. ஆனால், இவற்றையெல்லாம் புறந்தள்ளி மேலாதிக்கசிந்தனையின் வெளிப்பாடாக றஜலுனு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. உப்பில்லாப் பண்டம் மட்டுமல்ல, அது றஜலுனு உப்பாக இருந்தால் தமிழ்மக்களின் மனோவுணர்வில் அதுவும் குப்பையில்தான் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.