நெடுந்தீவு மண்ணின் மைந்தனும் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயருமாகியமறைந்த அதிவந்தனைக்குரிய அருட்கலாநிதி இராஜப்பு ஜோசப் ஆண்டகையின்ஞாபகார்த்தமாக நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவை நடாத்துகின்ற BISHOP’S CUP 2025 விளையாட்டு நிகழ்வுகள் இவ்வருடமும் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 2025 மே மாத இறுதிப் பகுதியில் போட்டிகள் நடாத்தப்படுவதற்கான அனுமதியினை நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளார் வழங்கியுள்ளமையால் நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் பதிவுக்கு உட்பட்டவிளையாட்டு கழகங்களின் நிர்வாகத்தினருடனான ஆலோசனை கூட்டம், அனுசரணையாளர்களை இணைத்துக்கொள்ளும் பணி மற்றும் வீரர்களிடமிருந்துவிண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகளை ஏற்பாட்டுக்குழு விரைவில் முன்னெடுக்கவுள்ளது.