வெள்ள அனர்த்தத்திற்கு பின்னரான தற்போதைய நிலைமைகள் தொடர்பாக யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றையதினம் (டிசம்பர்03) அரசாங்க அதிபர் அலுவலகத்தில்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்,
வெள்ள அனர்த்தத்தின் போது சிறப்பாக கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு தமதுநன்றியினைத் தெரிவித்ததுடன், தாம் பல பாதுகாப்பு நிலையங்களில்தங்கியிருந்த மக்களின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டதாகவும், உடனடியாக தீர்க்க வேண்டிய விடயங்களுக்கு நடவடிக்கை எடுத்ததாகவும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களையும் பார்வையிட்டதாகவும், சிலகிராமங்களில் வெள்ளத்தினை வெளியேற்றுவதற்கான பொறிமுறையினைஉடனடியாக ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படாத வகையில் பல நிரந்தர திட்டங்களைசம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்துசெயற்படுவோம் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
வெள்ள அனர்த்தத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும், பிரதேசசெயலாளர்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கியபிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்களைவழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.