மிகவும் அரிதாகவே நிகழும் ஒரு சம்பவமாக, ஒரு பசு மாடு மூன்று கன்றுகளை ஈன்றுள்ள அதிசய சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி உடுப்பிட்டி, இலக்கணாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி, தனது விலங்கு வேளாண்மை பணியின் ஒரு பகுதியாகப் பசு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த விவசாயியின் பசு மாடு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது.
இதில் இரண்டு நாம்பன்கள் மற்றும் ஒரு பசுக்கன்று உள்ளதாகவும், இது இலங்கையில் முதல்முறையாக இருக்கக்கூடும் எனவும் அந்த விவசாயி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், இம்மூன்று கன்றுகளும் சிறந்த ஆரோக்கியத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.