யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலா வழிகாட்டி நூலின் முதற்பிரதி ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் கலாசார ரீதியான சுற்றுலாவை மேன்மைப்படுத்தும்வகையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்கள் தொடர்பில் டிஜிற்றல் அடிப்படையிலான சுற்றுலா வழிகாட்டி நூலானது ஜனவரி 31 நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வைத்து வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழி்ல்நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர்முன்னிலையில் சனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் யாழ்ப்பாணமாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உத்தியோகபூர்வமாககையளித்து வெளியிட்டு வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்துப் பிரதேச செயலக பிரிவுகளையும்உள்ளடக்கிய வகையில் நூற்றுக்கு மேற்பட்ட கலாசார ரீதியான சுற்றுலாமையங்களை உள்ளடக்கிய வகையில் யாழ் மாவட்டச் செயலகத்தினால்தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.