இலங்கை மின்சார சபை, மின்சாரக் கட்டணத்தை சுமார் 20% உயர்த்துவதற்கானபரிந்துரையை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்குசமர்ப்பிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்கஹேமபால, இலங்கை மின்சார சபையின் பதில் தலைவராகநியமிக்கப்பட்டுள்ளார். இந் நியமனம், டாக்டர் திலக் சியம்பலாபிட்டியவின்வெளிநாட்டு விடுமுறையின் பின்னர் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, கடந்த மாதம் சர்வதேச நாணய நிதியம் (IMF), மின்சாரசெலவுகளை ஈடுசெய்யும் விலை நிர்ணயத்தையும், தானியங்கி விலைசரிசெய்தல் பொறிமுறையையும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியஅவசியத்தை வலியுறுத்தியது.
IMF தலைவரின் கருத்துப்படி, தற்போதைய மின்சாரக் கட்டணங்கள், உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் போன்ற செலவுகளை சமன்செய்வதில்தட்டுப்பாடு உள்ளது. அதேபோல், தானியங்கி கட்டண சரிசெய்தல் முறையும்எதிர்பார்த்த அளவில் செயல்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில், எதிர்வரும் ஜூன் மாதத்தில் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம்ஏற்படும் என்பதையும், அதில் உயர்வு தவிர்க்க முடியாது என்பதையும், ஜனாதிபதிஅனுர குமார திஸாநாயக்க ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.