நெடுந்தீவுப் பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம் –கனடா அமைப்பினரின் செயற்றிட்டங்களில் ஒன்றான முதியோருக்குரிய கொடுப்பனவுகள் அண்மையில் நெடுந்தீவு பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை இதன்போது அமரர் சின்னத்தங்கம் சுந்தரலிங்கம் அவர்களின்ஞாபகார்த்தமாக உணவுப்பொதிகளும் முதியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த மே10 அன்று மன்றத்தின் கனடா பிரிவு செயலாளர் க.பொன்னுத்துரைஅவர்கள் கலந்துகொண்டு வழங்கி வைத்ததுடன் இந்நிகழ்வில் மன்றத்தின் நெடுந்தீவு கிளை நிர்வாகத்தினரும் கலந்துகொண்டு உதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.