ஜனாதிபதி தமிழ் அரசுக் கட்சியின் தலைவரை சந்தித்தார்.

SUB EDITOR
1 Min Read

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் இடையே நேற்று (செப் 07) மாலை சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இச் சந்திப்பு, யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டில் இடம் பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரண்டு தேர்தல் பிரசங்கங்களில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது இந்த சந்திப்பு நடைபெற்றது.

மாவை சேனாதிராஜா, ஜனாதிபதியை இந்து மரபுப்படி வரவேற்றார். அவரின் தனிப்பட்ட அழைப்பின் அடிப்படையில் ஜனாதிபதி மாவை சேனாதிராஜாவின் இல்லத்திற்கு சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்திப்பின் போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது.

மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்று, வடமாகாணத்தின் அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என்று நம்புவதாக மாவை சேனாதிராஜா, சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

Share this Article
Exit mobile version