வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் ஒரு தொகை போதை பொருளுடன்இன்று (ஏப்ரல்8) அதிகாலை கடற்படையினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்அடிப்படையில் குறித்த நபர் உடுத்துறை கடற்பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டுகைது செய்யப்பட்டுள்ளார்.
8 சாக்குகளில் ஈரமான நிலையில் போதை பொருள் காணப்படுவதுடன் , மேலதிக விசாரணைகளின் பின்னர் போதைபொருள் மற்றும் சந்தேக நபர்மருதங்கேணி பொலிசாரிடம் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.
போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கட்டைக்காட்டைசேர்ந்தவர் என்றும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு தொகை போதை பொருளுடன்கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனையின் பின் விடுதலைசெய்யப்பட்டவர் என்று கடற்படை தெரிவித்துள்ளது.