யாழ் – பண்ணை கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு!!

SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம் – பண்ணை கடல் பகுதியில் நீரில் மூழ்கி இரண்டு பேர் இன்று (07/12) மாலை உயிரிழந்ததுடன் இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பண்ணை கடலில் நீராடச்சென்ற நால்வரே நீரில் மூழ்கியுள்ளனர் இதனை அவதானித்த அப்பகுதியில் நின்றவர்கள் நால்வரையும் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் யாழ் நகர் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதான இருவரே உயிரிழந்ததுடன் ஏனைய இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version