நெடுந்தீவு செயலகப்பிரிவில் பாதிக்கப்பட்டோர் கொடுப்பனவுக்கான பட்டியலில் கையொப்பம் !

SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகப்பிரிவில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவிக் கொடுப்பனவு மற்றும் அரசின் உலர் உணவு வழங்கல் பட்டியல்களில் உரியவர்களின் கையொப்பம் பெறும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது.

இதன்படி குடும்ப அங்கத்தவர் அடிப்படையில் அரச உலர் உணவுக்கான பெயர்ப்பட்டியல் மற்றும் ரூ 25,000.00 கொடுப்பனவு பெறுவோருக்கான பெயர்ப்பட்டியல் என்பவற்றில் கையொப்பம் பெறும் வேலைகள் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வைத்து நேற்றுமுதல் (15/12) ஆரம்பமாகி இன்றும் தொடர்கின்றது.

இதேவேளை மீன்பிடி, விவசாயம், கால்நடை மற்றும் சொத்து அழிவுகள் தொடர்பிலும் பிரதேச செயலகத்தில் உள்ள துறைசார் அலுவலர்களிடம் பாதிக்கப்பட்டோர் பதிவுகளை மேற்கொண்டுவருகின்றனர்

இதன்போது தமக்கான இழப்பீடுகள் பதியப்படவில்லை என குறிப்பிட்டும் பலர் கோரிக்கைக் கடிதங்களை நெடுந்தீவு பிரதேச செயலாளரிடம் வழங்கி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version