நயினாதீவு வைத்தியசாலையில் எதிர்வரும் சனிக்கிழமை (ஏப்ரல்19) அன்று மாபெரும் மருத்துவ முகாம் இடம்பெறவுள்ளது.
இதன்போது கண் நோயியல் நிபுணர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து நோயியல் நிபுணர்களும் ஒரே நேரத்தில் இம் மருத்துவ முகாமில் கலந்துகொள்ள உள்ளனர்.
இவ் அரிய வாய்ப்பினை தவறவிடாது அனைத்து பொதுமக்களும் பயன் பெறுமாறு நயினாதீவு பிரதேச வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரிஅழைப்புவிடுத்துள்ளார்.