யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை மற்றும் எழுநாவின்ஏற்பாட்டில் உடுவில் பிரதேச எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் விக்கிப்பீடியாஇ.மயூரநாதன் அவர்களால் எழுதப்பட்ட ‘யாழ்ப்பாண நகர வளர்ச்சி வரலாறு(1621 – 1948)’ நூல் வெளியீட்டு நிகழ்வானது நேற்றையதினம ( யூன் 04) புதன்கிழமை மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக்கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் அவர்களின்தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணை வேந்தர்பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
நூலின் அறிமுக உரையை யாழ் பல்கலைக்கழகப் புவியியல் துறைத் தலைவர் , சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா நிகழ்த்தியதுடன் தொடர்ந்துமதிப்பீட்டுரைகளை யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொன்னுத்துரைபாலசுந்தரம்பிள்ளை அவர்களும், யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறையைச்சேர்ந்த பேராசிரியர் தாமோதரன் பிள்ளை சனார்த்தனன் அவர்களும், படைப்பாளியும் அரசியல் விமர்சகருமான மஹாதேவா நிலாந்தன் அவர்களும்ஆற்றினார்கள்.
நூலாசிரியரான கட்டடக் கலைஞர் இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்அவர்களின் ஏற்புரையோடு நிகழ்வு நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.