இன்று (மே 09) காலை இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் அவசர தரையிறக்கத்தின் போது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 6 ஆக அதிகரித்துள்ளது. விபத்துக்குப்பின் ஹெலிகொப்டரில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தபோதும், சிகிச்சை பலனளிக்காமல் விமானப்படை வீரர்கள் இருவரும், இராணுவ விசேட படையைச் சேர்ந்த நான்கு வீரர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.