இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77 வது சுதந்திர தின யாழ்ப்பாணமாவட்ட நிகழ்வு இன்றையதினம் (பெப். 04) அரசாங்க அதிபர் மருதலிங்கம்பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர்உயர்தரப் பாடசாலை மற்றும் யாழ்ப்பாணம் சென் பெனடிக்ற் வித்தியாலயம்ஆகிய பாடசாலை மாணவர்களின் மேலைத்தேச வாத்தியக் குழுவின்அணிவகுப்பும், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மற்றும் வேம்படி மகளிர்உயர்தரப் பாடசாலை ஆகிய பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணியின்அணிவகுப்பும், சாரணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் 51 பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, பிரதிப்பொலிஸ்மா அதிபர், கடற்படை மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள், முப்படையின் அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்டசெயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டபலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது அணிவகுப்பு மரியாதை ஆரம்பமாகி – தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மத தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்கஅதிபர் அவர்களின் உரை உள்ளடங்கலாக பல நிகழ்வுகள் சிறப்பாகநடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.