கடல் மார்க்கமாக பிரான்ஸின் ரீ-யூனியன் தீவுக்குச் சட்டவிரோதமாகப் பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கையர்கள் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் பிரான்ஸ் அதிகாரிகளால் நேற்று இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி பலநாள் படகு ஒன்றின் மூலம் பிரான்ஸின் ரீ-யூனியன் தீவுக்குள் நுழைய முற்பட்டனர். அந்தப் படகில் 43 ஆண்களும், பெண் ஒருவரும், குழந்தை ஒருவரும் இருந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு மற்றும் சிலாபம் முதலான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, கடந்த ஆண்டில் மட்டும் ஆட்கடத்தில் ஈடுபட்ட 42 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் இருந்த ஆயிரத்து 532 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கைக் கடற்படை தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.