நெடுந்தீவு கல்விக் கோட்ட மட்ட விளையாட்டு விழா இன்று ஆரம்பம்!

SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கோட்ட மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு – 2024 இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன்11) காலை ஆரம்பமாகியுள்ளது.

நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில்  இன்று காலை ஆரம்பமாகிய போட்டிகள் நாளையும் இடம்பெறவுள்ளது.

நெடுந்தீவுக்கான பதில் கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற போட்டி நிகழ்வுகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்ததுடன் பேட்டிகளில் வெற்றியீட்டி தீவக வலயமட்ட போட்டிக்கு தெரிவாகியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article
Exit mobile version