தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைமேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அதனால் எதிர்வரும் மூன்று நாள்களில் மழைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட பல பிரதேசங்களில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுகிறது. கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்சமாக நீர்கொழும்பில் 31.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.