இன்று (மே 19) முதல் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பமாகியுள்ளது.
டெங்கு அபாயம் மிக அதிகமாக காணப்படும் சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசங்களை உள்ளடக்கி இந்த ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் போது வீடுகள், பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து சுற்றுப்புறங்களும் பரிசோதிக்கப்படும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதியில் 19,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதே காலத்தில் 7 மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.