தமிழ் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒன்றிணைந்துஎதிர்கொள்வது தொடர்பில் பேசுவதற்கு உத்தியோபூர்வமாக எனக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்கள் நலனுக்காக ஒன்றிணைய அழைப்புவிடுத்தால் எனது பங்களிப்பு நிச்சயாமிருக்கும் என தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்களுக்கானபோராட்டங்களை தலைமை தாங்கிய இயக்கங்களின் ஒன்றிணைவு தொடர்பில்அவரிடம் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நான் அன்றிலிருந்து இன்று வரை தமிழ் மக்களின்நலன் சார்ந்து எனது அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன்என்பது யாவரும் அறிந்த விடயம்.
தமிழ் மக்களின் அரசியல் அபிவிருத்தி மற்றும் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வுகாணுவதே எனது அரசியல் அவா.
துரதிஷ்டவசமாக பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் தமிழ் கட்சிகளின்ஒத்துழைப்பு உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் மக்களுக்கானதீர்வினை எட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை தமிழ் கட்சிகள் ஓரணியில்எதிர்கொள்வதா அல்லது தேர்தலின் பின்னர் ஓரணியில் செயல்படுவதா என்றவிவாதம் இடம்பெற்று வருகின்றன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தமிழ் கட்சிகள் எதிர்கொள்வது தொடர்பில்என்னுடன் சிலர் பேசினார்கள் அது நட்பு நீதியாக இடம்பெற்றதே தவிரஉத்தியோபூர்வமாக பேசுவதற்கோ கலந்துரையாடுவதற்கோ எனக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை பொறுத்தவரையில் ஒற்றுமை என்கின்ற விடயம்தமிழ் மக்களின் நலன் சார்ந்து கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை அல்லதுஒன்றிணைவு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு.
கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தொங்கு சபைகளில் ஆட்சிஅமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவை வழங்கியது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் யாழ் மாநகர சபையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்கி இமானுவேல் ஆனல்டமுதல்வர் ஆனார்.
அதேபோன்று யாழ் மாநகர சபையில் விஸ்வலிங்கம் மணிவண்ணுக்கு ஆதரவுவழங்கி அவரை முதல்வராக தெரிவு செய்வதற்கு உதவினோம்.
அதுமட்டுமல்லாது வேறு பிரதேச சபைகளிலும் மக்கள் நலன் சார்ந்த வரவுசெலவுத் திட்டங்கள் முன்வைக்கப்படும்போது பாதீட்டை தோற்கடிக்காமல்வெற்றி பெறுவதற்கு எமது கட்சி பங்களிப்பை வழங்கியுள்ளது.
தற்போது எமது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கானவேட்பாளர்கள் தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருகிறோம்.
ஆகவே தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிமக்கள் நலனுக்கான ஒன்றிணைவு அவசியம் என கருதும் பட்சத்தில்ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தயாராக இருக்கிறேன் என அவர் மேலும்தெரிவித்தார்