இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி மணல் தீடையில் 3 இலங்கையர்கள் சுற்றி திரிவதாக கடலோர காவல்படை பொலிஸாருக்கு தகவல்கிடைத்ததைத் தொடர்ந்து குறித்த மூவரையும் கடலோர காவல்படையினர் கைதுசெய்தனர்.
அப்போது அவர்கள் இலங்கை பேசாலைப் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு தஞ்சமாக வந்தோம் எனதெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துசெல்லப்பட்டனர்.
அகதிகளாக வந்த 3 பேர் மீதும் ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? எனஉளவுத்துறை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் பின் அவர்கள்அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பொலிஸார்தெரிவித்தனர்.