மாணவர்கள் இருவருக்கு இடையில் இன்று (மே 15) ஏற்பட்ட கைகலப்பில்மாணவர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு திருகோணமலை பொதுவைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை பாடசாலை ஒன்றில் கல்விப்பயிலும்இரண்டு மாணவர்களுக்கு இடையே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது பாடசாலையில் க.பொ.த.உயர்தரம் கற்கும் மாணவன் இதேபாடசாலையில் க.பொ.த.சாதாரண தரத்தில் கற்கும் மாணவனை தாக்கி சவரஅலகால் கழுத்தை அறுத்துள்ளார்.
படுகாயமடைந்த மாணவன் முதலில் புல்மோட்டை வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலைவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மாணவனை தாக்கி காயமேற்படுத்திய மாணவன் தப்பிச்சென்றுள்ளதாக அறியமுடிகின்றது.