எமது நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம்இழைத்த யுத்தகுற்றச்சாட்டுகளுக்கு தண்டனைவழங்கப்படாத நிலையே பெண் வைத்தியரைமுன்னாள் இராணுவ சிப்பாய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கநேரிட்டதுஎன யாழ் தீவக பெண்கள் வலை அமைப்பின் இணைப்பாளர் ஹம்சிகா ராஜ்குமார்குற்றச்சாட்டினார்.
அண்மையில் அனுராதபுரத்தில் முன்னாள் இராணுவ சிப்பாய் பாலியல்வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதிநிலைநாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஏற்பாடு செய்யப்பட்டதீவகபெண்கள் வலை அமைப்பின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் புதிய அரசாங்கம் அதாவது பெண் பிரதமர் பதவியேற்றதன் பின்னர்மகளிர்தின மகத்தான மாதத்தில் அனுராதபுரத்தில் முன்னாள் இராணுவவீரரினால் பெண் வைத்தியர் பாலியல்வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவமானது ஒட்டுமொத்த நாட்டின் பெண்களின்பாதுகாப்புக்கு சவால்விடுப்பதாகவும் நாட்டின் சட்டம்ஒழுங்கை சவாலுக்கு உட்படுத்தும்விடயமாகபார்க்கிறோம்.
ஒரு நாடு சமூக பொருளாதார கலாச்சார நீதியாகஅபிவிருத்தி அடையவேண்டுமானால் அந்த நாட்டில்பெண்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்.
நாட்டில் புதிய அரசாங்கம் ஒன்று பதவியேற்றுள்ளதுபெண்களுக்கான பாதுகாப்புஉறுதிப்படுத்தப்படும் என்ற மகிழ்ச்சியான நிலைப்பாடு தற்போதுஅனுராதபுரத்தில்பெண் வைத்தியர் பாலியல் வல்லுறவுக்குஉட்படுத்தப்பட்டமைமூலம் பெண்கள் மத்தியில்கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது தமிழ் பெண்கள் பாலியல்வன்கொடுமைக்குஉள்ளாக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேச நீதியை தமிழ் மக்கள்கேட்டிருக்கின்றநிலையில் குறித்த சம்பவத்தை சர்வதேசம் உற்றுநோக்கவேண்டும்.