மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 11) இலங்கை கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 87 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாககடற்படை தெரிவித்துள்ளது.
இத் தேடுதல் நடவடிக்கையின் போது எட்டு பொதிகளில் பொதிசெய்யப்பட்டிருந்த 218 கிலோ, 800 கிராம் கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன்ஆளில்லாத நிலையில் கண்ணாடி இழை படகு ஒன்றும் கடற் படையினரால்கைப்பற்றப்பட்டது.
கடற்படையின் நடவடிக்கைகளால் படகை கரைக்கு கொண்டு வர முடியாததால், கடத்தல் காரர்கள் பேசாலை கடற்கரையில் படகுடன் கேரள கஞ்சாவினை கைவிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் படகு ஆகியன மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக பேசாலை காவல் நிலையத்தில்ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.