யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் அவசர அழைப்பு பிரிவுக்கு (119) அழைப்பைஏற்படுத்திய நபர் திடீரென உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பொலிசாரின் 119 தொலைபேசி இலக்கத்திற்கு நபர் ஒருவர் சனிக்கிழமை(மே17) இரவு அழைப்பினை மேற்கொண்டு , குடும்ப தகராறு என கூறி அவசரமாகபொலிஸாரின் உதவியை நாடுவதாக தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நடமாடும் சேவையில்ஈடுபட்டிருந்த பொலிஸ் குழு , தொலைபேசி அழைப்பில் கூறப்பட்ட வீட்டின்முகவரியை கண்டறிந்து அங்கு விரைந்துள்ளனர்.
அங்கு பொலிஸார் சென்ற வேளை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பினைமேற்கொண்டதாக நம்பப்படும் இளைஞன் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டநிலையில் காணப்பட்டமையை அடுத்து , நோயாளர் காவு வண்டிக்குஅறிவிக்கப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் இளைஞன் யாழ் . போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சடலம்உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரிய வரும்என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளைமுன்னெடுத்து வருகின்றனர்