துணுக்காய் கல்வி வலயத்துக்கு உட்பட்ட க.பொ.த. சாதரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக கருத்தரங்கு பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தால் நேற்றுமுன்தினம் (மே 3) நடத்தப்பட்டது.
முல்லைத்தீவு பாலிநகர் மகா வித்தியாலயத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் 213 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கில் ஆங்கிலத் துறை வளவாளராக யா/சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி உதவி அதிபர் அ.கோகுலன், வரலாற்றுத் துறை வளவாளராக அனலைதீவு சதாசிவம் மகாவித்தியாலயம் ஆசிரியர் நா.பிரகாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.