கற்கடதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது நெடுந்தீவுபங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளாரினால் நேற்றையதினம்(மார்ச்27) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இன்றையதினம் (மார்ச் 28 ) வெள்ளிக்கிழமை நற்கருணை பெருவிழா திருப்பலி மாலை 05:00 மணிக்கு திருச்செபமாலையும் திருச்சிலுவை பாதை தியானமும்இடம்பெற்றதை தொடர்ந்து இடம்பெறும்.
நற்கருணை பெருவிழா திருப்பலியை கிளரீசியன் துறவறசபையின்அருட்பணியாளர் ம. அபிலஸ் அடிகளார் தலைமையேற்று ஒப்புக்கொடுக்கவுள்ளார்.
நாளையதினம் ( மார்ச்29) சனிக்கிழமை காலை 06:30 மணிக்குதிருச்செபமாலையுடன் ஆரம்பமாகின்ற திருவிழா திருப்பலி புனிதரின் திருச்சுரூப பவனி மற்றும் ஆசீருடன் நிறைவடையும். இப்பெருவிழாதிருப்பலியை அமலமரித்தியாகிகள் துறவறசபையின் மலரும் முல்லைஅமையத்தின் இயக்குனர் அருட்பணி ஜீவரட்ணம் அடிகளார் ஒப்புக்கொடுத்துசெபிக்கவுள்ளார்.