ஆனையிறவு தேசிய உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறுபிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்றையதினம்(மே14) கவனயீர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியாளர்களை பழிவாங்குவது போல் செயற்படுதல், உரிய வகையில்வேலைகளை வழங்காமை, மருத்துவ வசதிகள் இன்மை, குடிநீர் பிரச்சினை , குறைந்த வேலை நாட்கள், வேலை செய்யும் போது சீருடைகளோ, பாதுகாப்புகவசங்களோ வழங்கப்படுவதில்லை போன்ற கோரிக்கைகளுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.