இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஐந்து இலங்கையர்கள்இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படகு மூலம் இந்தியாவின் ராமேஸ்வரம் கடற்கரையை அடைந்த இந்தக்குழுவினர், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் இரண்டு சிறு குழந்தைகளும் இருப்பதாகத்தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கள்இந்தியாவுக்கு தப்பிச் வந்ததாக விசாரணை அதிகாரிகளிடம் அவர்கள்கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கையர்களையும் இலங்கை தமிழ்அகதிகளுக்காக நிறுவப்பட்ட மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.